Monday, September 15, 2008

மதமாற்றம்

ஒரு மூடன்
மற்றொரு மூடனை
ஒரு மூட நம்பிக்கையிலிருந்து
மற்றொரு மூட நம்பிக்கைக்கு
மாற்றுகின்றான்...

இதில்
லாப நஷ்ட கணக்கு ஏன் பார்கிறான்?
மூன்றாவது மூடன் !!

Wednesday, April 23, 2008

மூடநம்பிக்கை

கதாசிரியன் சினிமாவிற்கு கதை எழுதினான்!

மதம் என்று பெயரிட்டான்
நாயகன் பெயர் கடவுள்
வில்லன் பெயர் பேய்
மூடநம்பிக்கை என்ற மசாலா பாட்டு

படம் "சாதனை" படைத்துக்கொண்டிருக்கிறது !!!


பி.கு: மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் 'கலர்' துண்டு போடுகிறார்கள் என்று 'என்னிடம்' கேக்காதீர்!!

Tuesday, April 15, 2008

உள்குத்து-வெளிக்குத்து !!!

உமிக்கரியால் பல் தேய்த்த என்னை
டூத்பேஸ்ட்டிற்கு மாற்றினாய்

சீயக்காய் தேய்த்த என் தலையை
ஷேம்புவிற்கு மாற்றினாய்

தேங்காய் நார் தேய்த்து கழுவின என் உடம்பை
சோப்புவிற்கு மாற்றினாய்

இளநீரும் பதனீரும் குடித்த என்னை
கோலா குடிக்க மாற்றினாய்

கள்ளு அடித்த என்னை
பியர் குடிக்க மாற்றினாய்

இயற்கையை மதித்த என்னை
இல்லாததை கும்பிட மாற்றினாய்

இங்ஙனம் என் பாரம்பரியத்தை
நிரந்தரமாக மாற்றிகொண்டிருக்கும்
"விற்பனையாளனே"

இது உன் குற்றமா?
அல்லது
இங்ஙனம் மாறிகொண்டிருக்கும்
மனிதர்கள் குற்றமா?
யார் குற்றமானால் என்ன!!

நான் ஆட்சிக்கு வந்தால்
உன்னையும், மாறிய மக்களையும்
கழுவிலேற்றி விட்டு
மக்கள் 'இல்லா' ஆட்சி புரிவேன் !!!

Tuesday, April 1, 2008

விலை மாது

பூமியின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத நீ

மற்ற 99 சதவீத மக்களையும் வாழவைக்கும் இந்த வற்றாத பூமி

உன்னையும்

உடலை விற்காமல் வாழ, வழி வகுக்கும் என்பதை

ஏன் உணராமல் போனாய்!

Saturday, March 22, 2008

விலை மாது

முப்பத்தி ஐந்து வயதில்
மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும்
என் மனதும், உடலும்...

இருவதுகளிலே அதை செய்ய
ஏன் முன் வருவதில்லை !!

ஒருவேளை
உடல் நோகாமல் சம்பாதிப்பது
மனதோடு ஒட்டிவிட்டதோ !!!

மலரும் நினைவுகள் - இது நிஜமா?

என் சிறுவயதில் படித்த இந்த தமிழ் பாட்டு, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஞாபகம் வரும்:

"வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேழங்கள்
இறங்கி வரும் தாழங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
தின்னையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவழை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகந்த வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"

வருடங்கள் உருண்டோடி விட்டதால் (70-வதுகளில் படித்தது என்று நினைகிறேன்), மறதியின் காரணமாக சில இடங்களில் தவறுகள் இருக்கலாம்...

Friday, March 21, 2008

உலகம்

ஒருவன் இல்லாதிருப்பதை இருப்பதாக்குகின்றான்

மற்றொருவன் இருப்பதை இல்லாதாக்குகின்றான்

இவ்விருவரையும் பார்த்து, உமிக்கரியால் பல்லை தேய்த்துக் கொண்டே

வாய் விட்டு சிரிக்கின்றான் இந்த மாயாண்டி !

உரிமை

இடைகாட்டி உடைபோட உரிமையுண்டு
ஆனால்
அதை எடைபோட விடலைக்கு உரிமையில்லையே!

புகை இலை

ஒருவன் எலும்பு கூட்டை காட்டுகின்றான்

மற்றொருவன் எலும்பும் தோலுமாக இருக்கும் தன் குழந்தையை காட்டுகின்றான்

ஒருவன் புதிதாக முளைத்த செல்களை காட்டுகின்றான்

மற்றொருவன் செல்களே முளைக்காத தன் வரண்ட வயிற்றை காட்டுகின்றான்

யாருக்காக அழுவது !!!

எல்லாம் மாயை !!!

இறந்தோர் அறியவில்லை
இருப்போர் அறியார்
வருபோர் அறிவாரோ

எல்லாம் மாயை !!!