Tuesday, February 10, 2009

பெண்ணின் ஸ்பரிசம்

உணர்வுகள் ஆயிரம் கூடிய உன் கயல்விழிகள்
பல கதைகள் கூறிச் சென்றன‌

குயில்கள் வெட்கி குனியும் உன் இனிய குரல்
உசுப்பேத்திவிட்டன‌

தூரிகை பிடித்து பல வண்ணம் தீட்டிய உன் விரல்கள்
என் கைகளில் கஜுராஹொ சிற்பங்களும் தீட்டின‌

உன் கைபேசி மின்னஞ்சல்கள்
என் உறக்கத்தை கலைத்தன‌

ஏய் பெண்ணே!
இங்ஙனம் அன்பு இம்சைகள் தொடுக்கும் நீ
உன்னை எப்போழுது "முழுமையாக" கொடுக்கபோகிறாய்?

Tuesday, January 20, 2009

திருமங்கலம் இடைத்தேர்தல்

எதிரியின் புறமுதுகு மட்டுமே கண்டு ஆர்பரித்த மண்
கேவலம் சில நோட்டுகளுக்காக முதுகு சொரிய பணிந்ததேன்?

உன்னை இனி வீர மறவர் என்றழைப்பதா?
அல்லது கோழை சொரியர் என்று எள்ளி நகையாடுவதா?

உன் கேவலமான இச்செயல்
தமிழ் நாட்டின் தலையெழுத்தையே மாற்றப்போகிறது

எங்கே செல்லும் இந்த பாதை...