Showing posts with label மழை காலம். Show all posts
Showing posts with label மழை காலம். Show all posts

Saturday, March 22, 2008

மலரும் நினைவுகள் - இது நிஜமா?

என் சிறுவயதில் படித்த இந்த தமிழ் பாட்டு, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஞாபகம் வரும்:

"வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேழங்கள்
இறங்கி வரும் தாழங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
தின்னையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவழை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகந்த வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"

வருடங்கள் உருண்டோடி விட்டதால் (70-வதுகளில் படித்தது என்று நினைகிறேன்), மறதியின் காரணமாக சில இடங்களில் தவறுகள் இருக்கலாம்...