Tuesday, April 15, 2008

உள்குத்து-வெளிக்குத்து !!!

உமிக்கரியால் பல் தேய்த்த என்னை
டூத்பேஸ்ட்டிற்கு மாற்றினாய்

சீயக்காய் தேய்த்த என் தலையை
ஷேம்புவிற்கு மாற்றினாய்

தேங்காய் நார் தேய்த்து கழுவின என் உடம்பை
சோப்புவிற்கு மாற்றினாய்

இளநீரும் பதனீரும் குடித்த என்னை
கோலா குடிக்க மாற்றினாய்

கள்ளு அடித்த என்னை
பியர் குடிக்க மாற்றினாய்

இயற்கையை மதித்த என்னை
இல்லாததை கும்பிட மாற்றினாய்

இங்ஙனம் என் பாரம்பரியத்தை
நிரந்தரமாக மாற்றிகொண்டிருக்கும்
"விற்பனையாளனே"

இது உன் குற்றமா?
அல்லது
இங்ஙனம் மாறிகொண்டிருக்கும்
மனிதர்கள் குற்றமா?
யார் குற்றமானால் என்ன!!

நான் ஆட்சிக்கு வந்தால்
உன்னையும், மாறிய மக்களையும்
கழுவிலேற்றி விட்டு
மக்கள் 'இல்லா' ஆட்சி புரிவேன் !!!

1 comment:

J.P Josephine Baba said...

ஆட்சிக்கே வர வேண்டாம் நீங்கள்!காசிக்கு வண்டி ஏறுங்கள்!