உணர்வுகள் ஆயிரம் கூடிய உன் கயல்விழிகள்
பல கதைகள் கூறிச் சென்றன
குயில்கள் வெட்கி குனியும் உன் இனிய குரல்
உசுப்பேத்திவிட்டன
தூரிகை பிடித்து பல வண்ணம் தீட்டிய உன் விரல்கள்
என் கைகளில் கஜுராஹொ சிற்பங்களும் தீட்டின
உன் கைபேசி மின்னஞ்சல்கள்
என் உறக்கத்தை கலைத்தன
ஏய் பெண்ணே!
இங்ஙனம் அன்பு இம்சைகள் தொடுக்கும் நீ
உன்னை எப்போழுது "முழுமையாக" கொடுக்கபோகிறாய்?
Tuesday, February 10, 2009
Tuesday, January 20, 2009
திருமங்கலம் இடைத்தேர்தல்
எதிரியின் புறமுதுகு மட்டுமே கண்டு ஆர்பரித்த மண்
கேவலம் சில நோட்டுகளுக்காக முதுகு சொரிய பணிந்ததேன்?
உன்னை இனி வீர மறவர் என்றழைப்பதா?
அல்லது கோழை சொரியர் என்று எள்ளி நகையாடுவதா?
உன் கேவலமான இச்செயல்
தமிழ் நாட்டின் தலையெழுத்தையே மாற்றப்போகிறது
எங்கே செல்லும் இந்த பாதை...
கேவலம் சில நோட்டுகளுக்காக முதுகு சொரிய பணிந்ததேன்?
உன்னை இனி வீர மறவர் என்றழைப்பதா?
அல்லது கோழை சொரியர் என்று எள்ளி நகையாடுவதா?
உன் கேவலமான இச்செயல்
தமிழ் நாட்டின் தலையெழுத்தையே மாற்றப்போகிறது
எங்கே செல்லும் இந்த பாதை...
Monday, September 15, 2008
மதமாற்றம்
ஒரு மூடன்
மற்றொரு மூடனை
ஒரு மூட நம்பிக்கையிலிருந்து
மற்றொரு மூட நம்பிக்கைக்கு
மாற்றுகின்றான்...
இதில்
லாப நஷ்ட கணக்கு ஏன் பார்கிறான்?
மூன்றாவது மூடன் !!
மற்றொரு மூடனை
ஒரு மூட நம்பிக்கையிலிருந்து
மற்றொரு மூட நம்பிக்கைக்கு
மாற்றுகின்றான்...
இதில்
லாப நஷ்ட கணக்கு ஏன் பார்கிறான்?
மூன்றாவது மூடன் !!
Labels:
ellaam maayai,
ellAm mAyai,
எல்லாம் மாயை,
மதமாற்றம்,
மூட நம்பிக்கை
Wednesday, April 23, 2008
மூடநம்பிக்கை
கதாசிரியன் சினிமாவிற்கு கதை எழுதினான்!
மதம் என்று பெயரிட்டான்
நாயகன் பெயர் கடவுள்
வில்லன் பெயர் பேய்
மூடநம்பிக்கை என்ற மசாலா பாட்டு
படம் "சாதனை" படைத்துக்கொண்டிருக்கிறது !!!
பி.கு: மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் 'கலர்' துண்டு போடுகிறார்கள் என்று 'என்னிடம்' கேக்காதீர்!!
மதம் என்று பெயரிட்டான்
நாயகன் பெயர் கடவுள்
வில்லன் பெயர் பேய்
மூடநம்பிக்கை என்ற மசாலா பாட்டு
படம் "சாதனை" படைத்துக்கொண்டிருக்கிறது !!!
பி.கு: மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் 'கலர்' துண்டு போடுகிறார்கள் என்று 'என்னிடம்' கேக்காதீர்!!
Labels:
ellaam maayai,
ellAm mAyai,
நாத்திகம்,
பேய்,
மூடநம்பிக்கை
Tuesday, April 15, 2008
உள்குத்து-வெளிக்குத்து !!!
உமிக்கரியால் பல் தேய்த்த என்னை
டூத்பேஸ்ட்டிற்கு மாற்றினாய்
சீயக்காய் தேய்த்த என் தலையை
ஷேம்புவிற்கு மாற்றினாய்
தேங்காய் நார் தேய்த்து கழுவின என் உடம்பை
சோப்புவிற்கு மாற்றினாய்
இளநீரும் பதனீரும் குடித்த என்னை
கோலா குடிக்க மாற்றினாய்
கள்ளு அடித்த என்னை
பியர் குடிக்க மாற்றினாய்
இயற்கையை மதித்த என்னை
இல்லாததை கும்பிட மாற்றினாய்
இங்ஙனம் என் பாரம்பரியத்தை
நிரந்தரமாக மாற்றிகொண்டிருக்கும்
"விற்பனையாளனே"
இது உன் குற்றமா?
அல்லது
இங்ஙனம் மாறிகொண்டிருக்கும்
மனிதர்கள் குற்றமா?
யார் குற்றமானால் என்ன!!
நான் ஆட்சிக்கு வந்தால்
உன்னையும், மாறிய மக்களையும்
கழுவிலேற்றி விட்டு
மக்கள் 'இல்லா' ஆட்சி புரிவேன் !!!
டூத்பேஸ்ட்டிற்கு மாற்றினாய்
சீயக்காய் தேய்த்த என் தலையை
ஷேம்புவிற்கு மாற்றினாய்
தேங்காய் நார் தேய்த்து கழுவின என் உடம்பை
சோப்புவிற்கு மாற்றினாய்
இளநீரும் பதனீரும் குடித்த என்னை
கோலா குடிக்க மாற்றினாய்
கள்ளு அடித்த என்னை
பியர் குடிக்க மாற்றினாய்
இயற்கையை மதித்த என்னை
இல்லாததை கும்பிட மாற்றினாய்
இங்ஙனம் என் பாரம்பரியத்தை
நிரந்தரமாக மாற்றிகொண்டிருக்கும்
"விற்பனையாளனே"
இது உன் குற்றமா?
அல்லது
இங்ஙனம் மாறிகொண்டிருக்கும்
மனிதர்கள் குற்றமா?
யார் குற்றமானால் என்ன!!
நான் ஆட்சிக்கு வந்தால்
உன்னையும், மாறிய மக்களையும்
கழுவிலேற்றி விட்டு
மக்கள் 'இல்லா' ஆட்சி புரிவேன் !!!
Labels:
ellaam maayai,
ellAm mAyai,
உள்குத்து,
எல்லாம் மாயை,
நாத்திகம்,
விற்பனையாளர்கள்
Tuesday, April 1, 2008
விலை மாது
பூமியின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத நீ
மற்ற 99 சதவீத மக்களையும் வாழவைக்கும் இந்த வற்றாத பூமி
உன்னையும்
உடலை விற்காமல் வாழ, வழி வகுக்கும் என்பதை
ஏன் உணராமல் போனாய்!
மற்ற 99 சதவீத மக்களையும் வாழவைக்கும் இந்த வற்றாத பூமி
உன்னையும்
உடலை விற்காமல் வாழ, வழி வகுக்கும் என்பதை
ஏன் உணராமல் போனாய்!
Saturday, March 22, 2008
விலை மாது
முப்பத்தி ஐந்து வயதில்
மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும்
என் மனதும், உடலும்...
இருவதுகளிலே அதை செய்ய
ஏன் முன் வருவதில்லை !!
ஒருவேளை
உடல் நோகாமல் சம்பாதிப்பது
மனதோடு ஒட்டிவிட்டதோ !!!
மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும்
என் மனதும், உடலும்...
இருவதுகளிலே அதை செய்ய
ஏன் முன் வருவதில்லை !!
ஒருவேளை
உடல் நோகாமல் சம்பாதிப்பது
மனதோடு ஒட்டிவிட்டதோ !!!
Labels:
ellaam maayai,
ellAm mAyai,
மனம்,
விலை மாது
மலரும் நினைவுகள் - இது நிஜமா?
என் சிறுவயதில் படித்த இந்த தமிழ் பாட்டு, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஞாபகம் வரும்:
"வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேழங்கள்
இறங்கி வரும் தாழங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
தின்னையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவழை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகந்த வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"
வருடங்கள் உருண்டோடி விட்டதால் (70-வதுகளில் படித்தது என்று நினைகிறேன்), மறதியின் காரணமாக சில இடங்களில் தவறுகள் இருக்கலாம்...
"வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேழங்கள்
இறங்கி வரும் தாழங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
தின்னையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவழை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகந்த வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"
வருடங்கள் உருண்டோடி விட்டதால் (70-வதுகளில் படித்தது என்று நினைகிறேன்), மறதியின் காரணமாக சில இடங்களில் தவறுகள் இருக்கலாம்...
Friday, March 21, 2008
உலகம்
ஒருவன் இல்லாதிருப்பதை இருப்பதாக்குகின்றான்
மற்றொருவன் இருப்பதை இல்லாதாக்குகின்றான்
இவ்விருவரையும் பார்த்து, உமிக்கரியால் பல்லை தேய்த்துக் கொண்டே
வாய் விட்டு சிரிக்கின்றான் இந்த மாயாண்டி !
மற்றொருவன் இருப்பதை இல்லாதாக்குகின்றான்
இவ்விருவரையும் பார்த்து, உமிக்கரியால் பல்லை தேய்த்துக் கொண்டே
வாய் விட்டு சிரிக்கின்றான் இந்த மாயாண்டி !
Labels:
commercial world,
ellaam maayai,
ellAm mAyai,
haiku,
poiku
உரிமை
இடைகாட்டி உடைபோட உரிமையுண்டு
ஆனால்
அதை எடைபோட விடலைக்கு உரிமையில்லையே!
ஆனால்
அதை எடைபோட விடலைக்கு உரிமையில்லையே!
Labels:
ellaam maayai,
ellAm mAyai,
haiku,
leena,
loyola,
poiku
புகை இலை
ஒருவன் எலும்பு கூட்டை காட்டுகின்றான்
மற்றொருவன் எலும்பும் தோலுமாக இருக்கும் தன் குழந்தையை காட்டுகின்றான்
ஒருவன் புதிதாக முளைத்த செல்களை காட்டுகின்றான்
மற்றொருவன் செல்களே முளைக்காத தன் வரண்ட வயிற்றை காட்டுகின்றான்
யாருக்காக அழுவது !!!
மற்றொருவன் எலும்பும் தோலுமாக இருக்கும் தன் குழந்தையை காட்டுகின்றான்
ஒருவன் புதிதாக முளைத்த செல்களை காட்டுகின்றான்
மற்றொருவன் செல்களே முளைக்காத தன் வரண்ட வயிற்றை காட்டுகின்றான்
யாருக்காக அழுவது !!!
Labels:
beedi workers,
cancer,
ellaam maayai,
ellAm mAyai,
haiku,
poiku
எல்லாம் மாயை !!!
இறந்தோர் அறியவில்லை
இருப்போர் அறியார்
வருபோர் அறிவாரோ
எல்லாம் மாயை !!!
இருப்போர் அறியார்
வருபோர் அறிவாரோ
எல்லாம் மாயை !!!
Labels:
birth,
death,
ellaam maayai,
ellAm mAyai,
god,
haiku,
life,
poiku
Subscribe to:
Posts (Atom)